வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது

வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது
Updated on
1 min read

ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

ஆலைகளில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர் குறித்த உரிய ஆவணங்களை தொழிற்சாலை நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், போலீஸார் பணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சோதனை மேற்கொண்டனர். இதில், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த சம்சூஸ்ஜாமன் சர்தார் (39), அலாவுதீன் (36) ஆகிய இருவர், உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in