திருப்பத்தூர் அருகே வனப்பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்றவர் கைது

திருப்பத்தூர் அருகே தேக்குமரத்தை வெட்டி கடத்த முயன்றதாக வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட காமராஜ்.
திருப்பத்தூர் அருகே தேக்குமரத்தை வெட்டி கடத்த முயன்றதாக வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட காமராஜ்.
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வனப்பகுதியில் சுமார் ஒரு டன் எடையுள்ள தேக்குமரங்களை வெட்டி கடத்த முயன்ற ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆண்டியப்பனுார் அடுத்துள்ள கம்புகுடி வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வனச்சரகர் பிரபு மற்றும் வனக்குழுவினர் கம்புகுடி வனப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வனத்துறையினனரை பார்த்ததும் மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டிச் சென்றதில் ஒருவர் மட்டுமே சிக்கினார். விசாரணையில், அவர் கம்புகுடி கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (36) என்பது தெரியவந்தது. அவர் உள்ளிட்ட சிலர் வனப்பகுதியில் நன்கு வளர்ந்துள்ள தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது.

மேலும், வெட்டி கடத்த முயன்ற சுமார் 1 டன் எடையுள்ள தேக்குமரங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறையினர் தலைமறைவான நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், கம்புகுடி கிராமத்தைச் சேர்ந்த பூபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in