சென்னை | இளைஞரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சென்னை | இளைஞரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

சென்னை: சென்னை செனாய் நகர் வேம்புலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வக் குமார்(28). இவரை கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அமைந்தகரை மாங்காளி அம்மன்கோயில் அருகே சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, சகஆட்டோ ஓட்டுநரான கருணாநிதி(45) கத்தியா் குத்திக் கொலை செய்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற 3-வது கூடுதல் அமர்வில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கருணாநிதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த அமைந்தகரை காவல் நிலைய போலீஸாரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in