Published : 06 Aug 2022 07:14 AM
Last Updated : 06 Aug 2022 07:14 AM

திருவண்ணாமலை அருகே 3 குழந்தைகளை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை: தற்கொலைக்கு தாயும் முயற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தென் பெண்ணையாற்றில் 3 குழந்தைகளை தள்ளி கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு தாய் முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தில் வசிப்பவர் கட்டிடத் தொழிலாளி பரசுராமன் மனைவி அமுதா(27).

இவர் தனது 5 மற்றும் 4 வயது மகன்கள் மற்றும் 7 மாத பெண் குழந்தையுடன் வாழவச்சனூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் நேற்றுஉயிருக்குப் போராடினர். இதையறிந்த கிராம மக்கள் ஆற்றில் இறங்கி 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில், அமுதா உயிருடன் மீட்கப்பட்டார். மேலும், உயிரிழந்த நிலையில் 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்ததகவலின் பேரில், வாணாபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அமுதாவை சிகிச்சைக்காகவும் மற்றும் 3 குழந்தைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காகவும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x