Published : 06 Aug 2022 06:23 AM
Last Updated : 06 Aug 2022 06:23 AM

சென்னை விமான நிலையத்தில் 6.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், சாதிக் அலி ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர்கள் ரூ.1.38 கோடி மதிப்புள்ள 2.98 கிலோ தங்கக் கட்டிகள், தங்க நகைகள், ரூ.8.75 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுசிகரெட்கள், லேப்டாப்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, பன்னாட்டு விமான நிலைய வருகைப் பகுதியில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் மறைத்து வைத்திருந்த ரூ.1.63 கோடி மதிப்புள்ள 3.52 கிலோ தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மறைத்து வைத்தவர்கள் யார்என்பது குறித்து கண்காணிப்புகேமராவில் பதிவான காட்சிகளைகொண்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x