Published : 01 Aug 2022 04:05 AM
Last Updated : 01 Aug 2022 04:05 AM

சிவகங்கையில் போலீஸாரை தள்ளிவிட்டு விசாரணை கைதி தப்பி ஓட்டம்

சிவகங்கை

சிவகங்கையில் காவலர்களைத் தள்ளிவிட்டு தப்பியோடிய விசாரணைக் கைதியை தேடி வருகின்றனர்.

காளையார்கோவில் அருகே பொன்னாங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(32). இவரை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். அவரை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சிவகங்கைக்கு 2 காவலர்கள் நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர்.

அவருடன் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட சவுந்திரராஜனையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். இதையடுத்து, சவுந்திரராஜனை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சிவகங்கை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.

பிறகு சிறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த மனோகரனை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, காவலர்களைத் தள்ளிவிட்டு அவர் தப்பியோடினார்.

இது குறித்து காளையார்கோவில் காவலர் முத்துராமலிங்கம் அளித்த புகாரின்பேரில் சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிந்து தப்பியோடிய மனோகரனைத் தேடி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x