திருப்பூர் | பாலியல் துன்புறுத்தல் - தந்தைக்கு 20 ஆண்டு சிறை

திருப்பூர் | பாலியல் துன்புறுத்தல் - தந்தைக்கு 20 ஆண்டு சிறை
Updated on
1 min read

திருப்பூர் பெரியாயிபாளையம் பகுதி தையல் தொழிலாளியான 33 வயது நபர், தனது 12 வயது மகளை கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதையடுத்து கணவர் மீது மனைவி, அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், போக்ஸோ வழக்கு பதிந்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி நாகராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுமியின் தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்தார். இதையடுத்து அவரை கோவை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in