நாகர்கோவில் | ரயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் பறிமுதல்

நாகர்கோவில் | ரயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் பறிமுதல்
Updated on
1 min read

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து மும்பைக்குரயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளான அம்பர்கிரீஸை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் அம்பர்கிரீஸ் ரயிலில் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் வந்தது.நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு வனத்துறையினர் விரைந்தனர். அவர்களுடன் ரயில்வே போலீஸார் இணைந்து ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். மும்பை ரயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவரது பையில் 2 கிலோவுக்கு மேல் அம்பர்கிரீஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி.

அவர் தடிக்காரன்கோணத்தை சேர்ந்த தினகரன்(28) என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் சேர்ந்து அம்பர்கிரீஸை கடத்த முயன்ற மேலும் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in