எடப்பாடி | மாமியாரை கொன்ற மருமகள் தற்கொலை

எடப்பாடி | மாமியாரை கொன்ற மருமகள் தற்கொலை
Updated on
1 min read

எடப்பாடி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை கம்பால் தாக்கி கொலை செய்த மருமகள் போலீஸார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி கிராமம் தானமூர்த்தியூரைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவரது மனைவி தைலம்மாள் (75). இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் இருமகள்கள் உள்ளனர். இந்நிலையில், தைலம்மாளின் கடைசி மகன் மெய்வேலின் மனைவி செல்விக்கும், தைலம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

நேற்று காலை இருவருக்கும் இடையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில்,செல்வி, தைலம்மாளை காம்பால் தாக்கினார்.இதில், படுகாயம் அடைந்த அவரை மீட்ட உறவினர்கள் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் உயிரிழந்தார். இதை அறிந்த செல்வி, போலீஸ் விசாரணைக்கு பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுதொடர்பாக கொங்கணாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in