Published : 29 Jun 2022 06:26 AM
Last Updated : 29 Jun 2022 06:26 AM

கோவில்பட்டி | குழந்தையிடம் நகை திருடிய கோயில் பூசாரி கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கடலையூரைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவரது மனைவி முனீஸ்வரி(28). இவர்கள் தங்களது குழந்தைக்கு காதணி விழா நடத்த கடந்த 12-ம் தேதி, கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்கு வந்தனர்.

அப்போது குழந்தை அணிந்திருந்த 3.25 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து அவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், கோயில் பூசாரி ஆலம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (61) என்பவர் முனீஸ்வரியின் குழந்தையிடமிருந்து நகையை திருடியது தெரியவந்தது.

சுப்பிரமணியனை உதவி ஆய்வாளர் அரிகண்ணன் கைது செய்து, திருடப்பட்ட நகையை பறிமுதல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x