Published : 27 Jun 2022 09:40 AM
Last Updated : 27 Jun 2022 09:40 AM

ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் கைது

ராஜபாளையம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவரைபோலீஸார் கைது செய்தனர்.

ராஜபாளையம் அருகே குடல்பூரிநத்தம் கிராமத்தில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் பதுங்கியிருப்பதாக மதுரை கியூபிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்றமதுரை கியூ பிரிவு போலீஸார் மற்றும் கேரள போலீஸார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் மாவோயிஸ்ட் தீவிரவாதஇயக்கத்தைச் சேர்ந்த ராகவன்(40) எனத் தெரியவந்தது. அவரைகியூ பிரிவு போலீஸார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர், 2021-ம் ஆண்டில் ஆயுதப் பயிற்சி பெற்றது தொடர்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வந்த ராகவன், நீதிமன்ற விசாரணைக்குஆஜராகாமல் தலை மறைவானார். அவரை போலீஸார் தேடிவந்தனர். அவர் மீது கேரளாவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x