Published : 22 Jun 2022 06:41 AM
Last Updated : 22 Jun 2022 06:41 AM

சென்னை | திமுக பெண் கவுன்சிலர் காரிலிருந்த பணம் திருட்டு

சென்னை: திமுக பெண் கவுன்சிலர் காரில் இருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேப்பேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, 71-வது வார்டு, திரு.வி.க.நகர் கவுன்சிலராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த புனிதவதி. இவரது வீடு புரசைவாக்கம், பொன்னன் தெருவில் உள்ளது. அவரது கார் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டு வளாகத்தில் வழக்கம் போல் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, அங்கு வந்த சுமார் 60 வயதுடைய முதியவர் ஒருவர், காரின் கதவைத் திறந்து உள்ளே இருந்த ரூ.50 ஆயிரம் அடங்கிய பணப்பையை திருடிவிட்டு அங்கிருந்து தப்பினார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த புனிதவதி, காரின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் பார்த்தபோது, ரூ.50 ஆயிரம் அடங்கிய பணப் பை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து தனது கார் ஓட்டுநர் சரவணன் மூலம், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதியவர் காரில் திருடுவது புனிதவதியின் வீட்டில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது. அதை அடிப்படையாக வைத்து போலீஸார் துப்புத் துலக்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x