Published : 19 Jun 2022 04:15 AM
Last Updated : 19 Jun 2022 04:15 AM

சிவகங்கையில் அடுத்தடுத்து 3 கோயில்களில் திருட்டு

சிவகங்கை

சிவகங்கையில் அடுத் தடுத்து 3 கோயில்களில் திருட்டு நடந்துள்ளது. மாவட்டம்முழுவதும் கடந்த 3 மாதங்களில் 20 கோயில்களில் திருட்டு நடந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை முதலியார் தெருவில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில், வேலாயுதசாமி கோயில் தெருவில் உள்ள விநாயகர் கோயில், கல்லூரிச் சாலையில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல்களைத் திருடிச் சென்றனர்.

இந்த 3 கோயில்களின் உண்டியல்களிலும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை காணிக்கைப் பணம் இருந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நகரின் மையப் பகுதிகளில் உள்ள 3 கோயில்களில் அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக கோயில்களைக் குறிவைத்து ஒரு கும்பல் தொடர்ந்து திருடி வருகிறது.

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் ஒரு கோயில், சோழபுரத்தில் 3 கோயில்கள், இடையமேலூர் பகுதியில் ஒரு கோயில், சிங்கம்புணரி பகுதியில் 3 கோயில்கள், திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் உள்ள கோயில், அதேபோல் தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளிலும் சில கோயில்களில் திருட்டு நடந்துள்ளன.

மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் 20 கோயில்களுக்கு மேல் திருட்டு நடந் துள்ளன. ஆனால், இதில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீ ஸார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x