விருத்தாசலத்தில் மிளகாய்த் தூள் கலந்த ரசத்தை ஊற்றி மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்

விருத்தாசலத்தில் மிளகாய்த் தூள் கலந்த ரசத்தை ஊற்றி மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்
Updated on
1 min read

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடி கிரா மத்தை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் மணிராஜ். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, அதே ஊரைச் சேர்ந்த ஷர்மிளாபானுவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மணிராஜ் மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை, முழு நிர்வாணப்படுத்தி, கை கால்களை கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். ரசத்துடன், மிளகாய் தூளை கலந்து அவர் உடலில் ஊற்றி கரண்டியால் தாக்கி உள்ளார்.

இதில் அவர் சுயநினைவு இழந்து வீட்டிற்குள் கிடந்தார். இதை பார்த்த, மணிராஜின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் ஷர்மிளா பானுவை மீட்டு உளுந் தூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்ககப்பட்டார். ஆனால் வலி தாங்க முடியாமல் அவர் வீட்டில் மயக்கம் அடைந்தார், இதனால் அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்க கூடாது என அப்பெண்ணை மிரட்டியதாகவும், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய பின்பே அப்பெண்ணின் பெற்றோருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் நேற்று விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் மகளிர் காவல் துறையி னர் விசாரணை நடத்தி வரு கின்றனர். தற்போது மணிராஜ் தலைமறைவாகி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in