விருத்தாசலத்தில் மளிகைக் கடையில் ஏமாற்றி பொருட்கள் வாங்கியவரை தாக்கிய கும்பல்: கட்டி வைத்து உப்பு, மிளகாய்த் தூள் தூவியதாக புகார்

விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் அந்தோணிடேவிட்.
விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் அந்தோணிடேவிட்.
Updated on
1 min read

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மளிகை கடையில் ஏமாற்றி பொருள் வாங்கியதாக இளைஞரை கட்டி வைத்து, உடம்பில் மிளகாய்த் தூள், உப்பு கொட்டி தாக்கியதாக 10 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலத்தை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி டேவிட். இவர்விருத்தாசலம் அரசு மருத்து வமனை அருகே உள்ள ஒரு கடையில், போலியாக பில் தயாரித்து மளிகை பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த கடை தரப்பைச் சேர்ந்த சிலர் அவரை குடோனில் கட்டிப்போட்டதாக கூறப்படுகிறது. அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அந்தோணிடேவிட் உடம்பில் மிளகாய்த் தூள், உப்புகொட்டி தாக்கியதாக கூறப்படு கிறது.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் அந்தோணி டேவிட்டை மீட்டுவிருத்தாசலம் அரசு மருத்து மனையில் அனுமதித்தனர். மேலும் விருத்தாசலம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அங்கிட்ஜெயின், அவரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து அந்தோணி டேவிட்டை தாக்கியவர்களை போலீஸார் பிடித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in