Published : 06 Jun 2022 07:23 AM
Last Updated : 06 Jun 2022 07:23 AM

திருச்சி | ரூ.20 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை துபையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகள், அவர்களின் உடைமைகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது, ஒரு ஆண் பயணியின் உடைமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதில், அவர் கொண்டு வந்த வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருட்களில் 20 துண்டுகளாக மறைத்து வைத்து, ரூ 20 லட்சம் மதிப்பிலான 385 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x