பொன்னேரி ரயில் நிலையத்தில் ரகளை: 7 கல்லூரி மாணவர்கள் கைது

பொன்னேரி ரயில் நிலையத்தில் ரகளை: 7 கல்லூரி மாணவர்கள் கைது
Updated on
1 min read

பொன்னேரி: பொன்னேரியில் உள்ள அரசினர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக கும்மிடிப்பூண்டிரயில் நிலையத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் சிலர் பேண்ட் வாத்தியம் முழங்க, ஆடி பாடிரகளையில் ஈடுபட்டனர். அவர்களை ரயில்வே பாதுகாப்புபடையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, பொன்னேரிரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம், பாட்டம் என ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பயணிகள் அச்சமடைந்தனர். மேலும், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ஒருவரை மாணவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர், 7 மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் இரவு சென்னை- சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in