Published : 10 Jun 2022 01:34 PM
Last Updated : 10 Jun 2022 01:34 PM

சென்னையில் ஒரு வாரத்தில் 14.71 கிலோ கஞ்சா பறிமுதல்: 23 வழக்குகளில் 34 பேர் கைது

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்கள் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 14.71 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 23 வழக்குகள் பதியப்பட்டு 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள காவல் ஆணையர் சங்கல் ஜிவால் உத்தரவிட்டார்.

இதன்படி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கணகாணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த தனிப்படையினர் கடந்த 3-ம் தேதி முதல் 9ம் தேதி நடத்திய சோதனையில், கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வந்தது மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x