Published : 05 Jun 2022 06:53 AM
Last Updated : 05 Jun 2022 06:53 AM

அண்ணா பல்கலை. பதிவாளர் ஓய்வு நாளில் பணி இடைநீக்கம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் கடந்த ஜூன் 2-ம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், அன்றைய தினம் அவரை இடைநீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் தேர்வுக்கான நேர்காணல் குழுவில் கணேசன் இடம்பெற்றிருந்தார். அப்போது, விதிகளுக்கு புறம்பாக தகுதியற்ற நபர்களை தேர்வு செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. அதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால், ஓய்வுபெறும் நாளில் அவரை பணி இடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x