காரிமங்கலம் வட்டத்தில் சிறுமிக்கு திருமணம்: மணமகன் கைது

காரிமங்கலம் வட்டத்தில் சிறுமிக்கு திருமணம்: மணமகன் கைது
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில் சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் மணமகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காரிமங்கலம் வட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (31). தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இரு தரப்பு பெற்றோர்களின் ஏற்பாட்டின்பேரில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது. இது தொடர்பாக சமூக நலத்துறையில் காரிமங்கலம் பகுதியின் விரிவாக்க அலுவலராக பணியாற்றும் கல்யாணி (59) என்பவர் பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் மணமகன் மஞ்சுநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in