திருப்பூர் | இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது

திருப்பூர் | இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் கே.சுரேஷ் (29). இவரது நண்பர்கள் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (30), மணிகண்டன் (29), குணா (32), அறிவுபிரகாஷ் (31), பிரவீன்குமார் (30). இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சந்திராபுரம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அவர்களுக்குள் யார் தலைவன் என்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தான்சொல்வதை, மற்றவர்கள் கேட்க வேண்டும் என சுரேஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.

இதனால் கோபமடைந்த 5 பேரும் சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலின்பேரில் நல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுரேஷின் நண்பர்கள் 5 பேரையும் நேற்று கைது செய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in