காஞ்சிபுரம் | தந்தையை கொன்ற மகன் தலைமறைவு

காஞ்சிபுரம் | தந்தையை கொன்ற மகன் தலைமறைவு
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாட்டம், உத்திரமேரூர் அருகே காட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் ( 75). இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை அருகே தனது மகளுடன் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் கடந்த 26-ம் தேதி மது அருந்த பணம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கார்த்திகேயன் தந்தையைத் தாக்கியுள்ளார். காயமடைந்த கண்ணன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று காலை கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் கார்த்திகேயனைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in