Published : 29 May 2022 04:00 AM
Last Updated : 29 May 2022 04:00 AM

புழல் மத்திய சிறை காவலர் தற்கொலை

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறைச்சாலையில் விசாரணை பிரிவு காவலராக பணிபுரிந்து வந்தவர் காசிராமன் (29). திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு சரண்யா என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்கள் புழல் சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தம்பதியினர் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிஇடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த காசிராமன் வீட்டில் உள்ள தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.

வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்தமனைவி சரண்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவைஉடைத்து சென்று பார்த்தபோது, மின்விசிறியில் காசிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவல் அறிந்து போலீஸார், சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து,உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x