

மும்பை: சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டுள்ளார். போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர் விடுவிப்பு என தெரிகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பந்தப்பட்ட கப்பலில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பது உறுதியானது. அதன்பேரில் கப்பலில் பயணித்த சிலர் கைது செய்யப்பட்டனர். அதில் ஆர்யன் கான், அவரது நண்பர் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த வழக்கில் சிக்கிய ஆர்யன் கான் சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சுமார் 20 பேர் அப்போது கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகே ஆர்யன் கானுக்கு பிணை கிடைத்தது. தொடர்ந்து இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் பணியை முன்னெடுத்தது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு குறித்த 10 முக்கிய அம்சங்கள்