சாத்தூர் அருகே குடிநீர் வாகனம் மோதி குழந்தை உயிரிழப்பு: 17 வயது சிறுவன் மீது வழக்கு பதிவு

சாத்தூர் அருகே குடிநீர் வாகனம் மோதி குழந்தை உயிரிழப்பு: 17 வயது சிறுவன் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

சாத்தூர்: சாத்தூர் அருகே குடிநீர் டேங்கர் வேன் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக 17 வயது சிறுவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையைச் சேர்ந்தவர் முத்துக்குமாரவேல் (32). இவர் வெளிநாட்டில் பணியாற்றி வரு கிறார். இவரது மனைவி இந்திரா. இவர்களது இளைய மகன் சோலைராஜ் (2).

நேற்று காலை தெருவில் குழந்தை சோலைராஜ் விளை யாடிக் கொண்டிருந்தான்.

அப்போது கோணம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமிக்குச் சொந்தமான குடிநீர் டேங்கர் வாகனத்தை வீரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டிவந்தான். தெருவுக் குள் வந்த குடிநீர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது, அங்கு விளையாடிக் கொண் டிருந்த சோலைராஜ் மீது மோதி யது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுதொடர்பாக டிராக்டர் ஓட்டிவந்த 17 வயது சிறுவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in