Published : 23 May 2022 06:12 AM
Last Updated : 23 May 2022 06:12 AM

பெண்களை கேலி செய்தோரை கண்டித்த ராஜபாளையம் அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல்

துரைமுருகேசன்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பின்புறம் மதுபோதையில் சிலர் சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அவ்வழியாகச் செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.

இதுகுறித்து போலீஸாருக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை பழைய பேருந்து நிலையம் பின்புறம் சென்ற பெண்களை மர்ம நபர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்துள்ளனர். அப்போது, அங்கு சென்ற அதிமுக வடக்கு நகரச் செயலர் வழக்கறிஞர் துரைமுருகேசன் (55), அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலர் ஜெயராமன் (26) ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர்.

அப்போது, போதையில் இருந்த மர்ம நபர்கள் 4 பேரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பாட்டிலால் தாக்கினர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ராஜபாளையம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x