பாலியல் வன்கொடுமை புகாரில் நாமக்கல்லில் 3 இளைஞர்கள் கைது

பாலியல் வன்கொடுமை புகாரில் நாமக்கல்லில் 3 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 இளைஞர்களை நாமக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

நாமக்கல் வீசாணத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ்குமார் (எ) மணிகண்டன் (20), முரளி (21), நவீன்குமார் (21) மற்றும் வல்லரசு. இவர்கள் கடந்த 19-ம் தேதி அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நகை, பணத்தை பறித்துச் சென்றதாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் தினேஷ்குமார், முரளி, நவீன்குமார் ஆகிய மூவரை மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வல்லரசுவை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in