Published : 14 May 2022 04:00 AM
Last Updated : 14 May 2022 04:00 AM

புதுச்சேரி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி

புதுச்சேரி

புதுச்சேரி சாரதாம்பாள் நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் பாக்கமுடையான்பட்டு பார்வதி திருமண மண்டபம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரிடம் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில் வசித்த முல்லைநாதன் (49) என்பவர் பழக்கமானார்.

தனக்கு தெரிந்த நபர் ஒருவர் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருவதாகவும், அவர் தற்போது சென்னை வந்துள்ளார். அவர் வேலைபார்க்கும் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் குணசேகரனிடம் முல்லைநாதன் தெரிவித்தார்.

இதையடுத்து குணசேகரன் தனது ஜெராக்ஸ் கடையின் அருகில் ஸ்கூல் பேக் கடை வைத்திருக்கும் சாதிக் என்பவரிடம் கூறி, அவரது மகன் சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இரண்டரை லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொடுத்தார். 5 மாதங்கள் கடந்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.

இதுகுறித்து குணசேகரன், முல்லைநாதனிடம் கேட்டபோது தனி ஆளாக வேலைக்கு அனுப்ப முடியாது. குழுவாகத்தான் அனுப்ப முடியும். எனவே இன்னும் ஆட்கள் இருந்தால் ஏற்பாடு செய்யுமாறு முல்லைநாதன் தெரிவித்தார். அதன்படி தனக்கு தெரிந்த மேலும் 9 பேரிடம் பணம் வாங்கி கொடுத்தார். மொத்தம் ரூ.14 லட்சம் வங்கி கொடுத்தார். ஆனாலும் விசா பெற்றுத்தரவில்லை.

இதுபற்றி விசாரித்தபோது, முல்லைநாதன் அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. ஆனால் அவர் பணத்தை தரவில்லை.

இதுகுறித்து குணசேகரன் புதுச்சேரி சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து முல்லைநாதனை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x