விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திமுக பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திமுக பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விருதுநகரில் 22 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், அவரது நண்பரான திமுக பிரமுகர் ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜூனத் அகமது ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 12-ம் தேதி மனுத் தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ஜாமீன் மனுவை தள்ளுடி செய்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in