Last Updated : 24 Apr, 2022 10:23 PM

1  

Published : 24 Apr 2022 10:23 PM
Last Updated : 24 Apr 2022 10:23 PM

மேலூரில் சிறுமியை திருமணம் செய்த பெண் போக்சோ சட்டத்தில் கைது

மதுரை: மேலூரில் சிறுமியை திருமணம் செய்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கீழவளவு அருகிலுள்ள கரியாபட்டியைச் சேர்ந்தவர் சகிதா பேகம் (29), சிறுமியின் உறவினர். இவர் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சகிதா பேகம், பெற்றோர் வீட்டில் இல்லாத போது, தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொட்டு பழகி இருக்கிறார். சிறுமிக்கு செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து, அதன்மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர்.

செல்போன் குறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டபோது, அவர் சகிதா பேகத்துடன் பழகுவது தெரிய வந்து பெற்றோர் சிறுமியைக் கண்டித்துள்ளனர். இதற்கிடையில் ஏப்.6-ம் தேதி, சகிதா பானு அவரது உறவினர் வகிதா பானு (29) என்பவரின் உதவியோடு, சிறுமிக்கு நதாலிகட்டியுள்ளார். இதனை தொடர்ந்து மேலூரில் லாட்ஜ் ஒன்றிற்கு அழைத்துச் சென்று சிறுமியுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் , சகிதா பேகம், அவரது உறவினரான வகிதா பானு ஆகியோர் மீது‘போக்சோ ’சட்டம் மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் ரமாராணி இருவரையும் கைது செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x