சென்னையில் திருட்டில் ஈடுபட்டு கோவையில் பதுங்கிய நபர் கைது

சென்னையில் திருட்டில் ஈடுபட்டு கோவையில் பதுங்கிய நபர் கைது
Updated on
1 min read

சென்னையில் திருட்டில் ஈடுபட்டு கோவையில் பதுங்கிய நபரை துப்பாக்கி முனையில் சென்னை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி, அண்ணா நகர் விரிவாக்கம் 2-வதுவீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 86 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் தொகை திருட்டு போனதாக கடந்த 8-ம் தேதி வேளச்சேரி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கோயம்பேடு பேருந்துநிலையம் வரையுள்ள, ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் சென்னையில் இருந்து பேருந்து மூலமாக கோவைக்கு தப்பிச் சென்றதை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து தனிப்படை போலீஸார், திருட்டில் ஈடுபட்ட நபரைசெல்போன் டவர் மூலம் கண்டறிந்து, அவரைப் பிடிக்க முயன்றனர். அந்நபரின் இருப்பிட லொகேஷன் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வடமதுரையை காட்டியது.

இதைத் தொடர்ந்து, இருதினங்களுக்கு முன்னர் தனிப்படை போலீஸார், வடமதுரையில் பதுங்கியிருந்த நபரை துப்பாக்கி முனையில் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர், வடமதுரை ஜோஸ் நகரைச் சேர்ந்தமுத்துகிருஷ்ணன் எனத் தெரியவந்தது. அவரிடம் இருந்த 52 பவுன் நகை, ரூ.4.5 லட்சம் தொகை ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீஸார், முத்துக்கிருஷ்ணனை கைது செய்து சென்னைக்கு அழைத்துச்சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in