புதுச்சேரி | போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பு

புதுச்சேரி | போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவருக்கு10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும், போக்சோ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணி சத்யமூர்த்தி என்ற சிவசுப்ரமணியன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரின் 13 வயது மகளை தவறான நோக்கத்துடன் சாக்லெட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி குடும்பத்தினரிடம் தனக்கு நடந்ததைக் கூறியுள்ளார். இதனை அடுத்து ஒதியன்சாலை காவல்நிலையத்தில் சிவசுப்பிரமணியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் முன்பாக நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளியான மணி சத்யமூர்த்திக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in