பேய் விரட்டுவதாக கூறி பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

பேய் விரட்டுவதாக கூறி பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த திருமணமான 22 வயது பெண் ஒருவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.அக்கம்பக்கத்தினர் அவருக்கு பேய் பிடித் திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அவரை பெண்ணாடத்தில் உள்ள தர்கா ஒன்றிற்கு உறவினர்கள் அண்மையில் அழைத் துச் சென்றுள்ளனர். உறவினர்களை வெளியே நிற்கச் சொல்லிய தர்காவின் நிர்வாகி அப்துல்கனி (54) என்பவர், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இதனை வெளியில் நின்ற உறவினர்கள் பார்த்து, அப்பெண்ணை மீட்டதோடு, அப்துல்கனியை பிடித்து பெண்ணாடம் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீஸார் அப்துல்கனி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in