ரவுடி வெள்ளைக்காளியை திண்டுக்கல் சிறைக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

ரவுடி வெள்ளைக்காளியை திண்டுக்கல் சிறைக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

மதுரை: ரவுடி வெள்ளைக்காளியை திண்டுக்கல் சிறைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த ரவுடி வெள்ளைக்காளி (எ) காளிமுத்து. இவரது மனைவி திவ்யா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் சகோதரர் சின்னமுனுசு கடந்த 2004-ல் வி.கே.குருசாமி ஆட்களால் கொலை செய்யப் பட்டார். இதையடுத்து இரு குடும்பங்கள் இடையே பல்வேறு மோதல்கள் நடந்தன. இது தொடர் பாக இரு தரப்பினர் மீதும் மதுரை காவல்நிலையங்களில் பல வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன.

என் கணவர் மீது பல வழக்குகள் உள்ளன. அவர் 2016-ல் கைதானபோது போலீஸார் அவரது இடது கால் முட்டியை இரும்புக் கம்பியால் அடித்து உடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஒன்றரை ஆண்டுகளாக வெள்ளைக்காளி திருச்சி சிறையில் உள்ளார். அவரால் நீண்ட நேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாது. அவரை வழக்கு விசாரணைக்காக மதுரையை சுற்றியுள்ள நீதிமன்றங்களுக்கு போலீஸார் அடிக்கடி திருச்சியில் இருந்து அழைத்து வருகின்றனர்.

வெளியூரில் இருப்பதால் அவரை நேரில் பார்த்து பேசுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே, என் கணவரை திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரர் கணவர் மீது 8 கொலை வழக்குகள் உள்ளன.

கஞ்சா வழக்குகளும் உள் ளன. திண்டுக்கல் சிறையில் மனுதாரரின் கணவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in