சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை - கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை - கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

நெய்வேலி அருகிலுள்ள பெரிய கண்ணாடி காலனியைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி (25). டிப்ளமோ படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். கடந்த 17-3-2020 அன்று அந்த சிறுமியை திருச்சிக்கு கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர், அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சூரியமூர்த் தியை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கட லூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந் தது. இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி நேற்று சூரியமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறு மிக்கு அரசிடமிருந்து ரூ.5 லட்சம் பெற்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து போலீஸார் சூரியமூர்த்தியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கலாசெல்வி ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in