வேலூர்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

வேலூர்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
Updated on
1 min read

கே.வி.குப்பம் அருகே இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த கரசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (28). இவர், கே.வி.குப்பம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டறிந்த பெற்றோர், மாணவியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது அவர், ராஜசேகரன் தன்னிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக பெற்றோரிடம் தெரி வித்தார்.

இதுகுறித்து லத்தேரி காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் நேற்று புகார் செய் தனர். அதன்பேரில் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, ராஜசேகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in