மதுரை: மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு

மதுரை: மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு
Updated on
1 min read

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (32). இவரது மனைவி பாண்டியம்மாள் (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஓட்டுநரான பெருமாள் வேலையின்றி உள்ளூரில் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.

இதுகுறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாண்டியம்மாள் தோட்டத்தில் வேலை செய்த போது, பெருமாள் அவரது தலையில் கல்லால் தாக்கினார். இதில் மயங்கி விழுந்த பாண்டி யம்மாளை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நேற்றிரவு பாண்டியம்மாள் உயிரிழந்தார்.

விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து பெருமாளை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in