ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலை. விடுதியில் ஆய்க்குடி பி.பார்ம் மாணவர் மர்மமான முறையில் மரணம்

மணிகண்டன்
மணிகண்டன்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் ஒருவர் நேற்று மர்மான முறையில் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் மணிகண்டன் (22). வில்லிபுத்தூர் அருக உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 6-ம் தேதி ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர், மீண்டும் கல்லூரிக்கு திரும்பவில்லை என கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே விடுதியில் 7-வது தளத்தில் பயன் படுத்தப்படாமல் இருந்த ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுபற்றி கல்லூரி நிர்வாகத் துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூட்டிய அறையை திறந்து பார்த்தபோது அங்கு மாணவர் மணிகண்டன் இறந்துகிடந்தார்.

கிருஷ்ணன்கோவில் போலீ ஸார் அவரது சடலத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த மாணவர் தற்கொலை செய்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in