

மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பிற்பகல் உணவு இடைவேளையின்போது இரு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர், சிறிய கத்தியால் மற்றொரு மாணவரை வயிற்றில் கீறியதில் அவர் காயமடைந்தார். அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.