Published : 27 Feb 2022 07:59 AM
Last Updated : 27 Feb 2022 07:59 AM

விருதுநகர்: பேராசிரியரிடம் 8 பவுன் பறிப்பு

விருதுநகர் பெத்தனாட்சிநகரைச் சேர்ந்தவர் பிர்லா சேகரன் (77). சிங்கப்பூரில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் திருமண மண்டபம் நடத்தி வருகிறார். கடந்த 25-ம் தேதி அங்கு வந்த ஒரு இளைஞர் மண்டபத்தை பதிவு செய்ய வந்ததாகக் கூறி சுற்றிப் பார்த்துள்ளார். திடீரென பிர்லா சேகரனை தாக்கி 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பினார்.

விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x