Published : 27 Feb 2022 10:08 AM
Last Updated : 27 Feb 2022 10:08 AM

திருச்சி: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் பெற்றோர் மீது வழக்குப் பதிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகேயுள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் குமார் (எ) பெரியசாமி. இவர் தனது பெற்றோருடன் உதவியுடன் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளதாக, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டம் வட்டார சமூக நல அலுவலர் சுந்தரி புகார் அளித்தார். அதன்பேரில் குமார், அவரது தந்தை கனகராஜ், தாய் லட்சுமி ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்ஸோ சட்டம் ஆகியவற்றின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x