Published : 25 Feb 2022 06:25 AM
Last Updated : 25 Feb 2022 06:25 AM

ஆந்திராவில் ரூ.5 கோடி நகை கொள்ளை

விஜயநகரம்: ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மணிக்கூண்டு அருகே உள்ள ரவி ஜுவல்லர்ஸ் எனும் நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடை வழக்கம்போல் கடந்த புதன்கிழமை இரவு பூட்டப்பட்டது. இந்நிலையில் ஊழியர்கள் நேற்று காலையில் கடையை திறந்தபோது, அதில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விஜயநகரம் முதலாவது காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கடையின் மேற்கூரையில் துளையிட்டு, அதன் வழியாக கடைக்குள் குதித்து, தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x