

வில்லியனூர் அருகே விஷம் சாப்பிட்டு செவிலியர் தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே வி.மணவெளியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் குடிசைமாற்று வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (35). தமிழக பகுதியான தூக்கனாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 ஆண்டு களாக உமா ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குண மாகவில்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் உமா மயங்கி விழுந்தார். அவரை மீட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு உமாவிடம் விசாரித்தபோது விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமா இறந்தார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.