Published : 07 Feb 2022 01:31 PM
Last Updated : 07 Feb 2022 01:31 PM

சென்னையிலிருந்து புதுச்சேரி வந்த பேருந்தில் குழந்தையை விட்டுச் சென்ற நபர்

கள்ளக்குறிச்சி

பேருந்தில் 4 மாத ஆண் குழந்தையை பெண் பயணி ஒருவரிடம் கொடுத்துவிட்டு கல்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்கிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த நீலாங் கரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புதுச்சேரியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று அதிகாலை தனது மனைவி சரஸ்வதியுடன் அரசுப் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது நீலாங்கரை அக்கரை வாட்டர்டேங்க் பேருந்து நிறுத்தத் தில் கைகுழந்தையுடன் ஒரு நபர்ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டமாகஇருப்பதால் அவர் தனது குழந் தையை வைத்துக்கொள்ளும்படி சரஸ்வதியிடம் கொடுத்துள்ளார்.

குழந்தையை மடியில் படுக்கவைத்திருந்த சரஸ்வதி, சிறிது நேரத்தில் குழந்தை தூங்கி விடவே அப்படியே பயணித்துள்ளார். மகாபலிபுரம் வந்த போது, குழந்தையை கொடுத்த நபரை தேடிய போது, அந்த நபர் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, தனது கணவரிடம் கூற, அவர் பேருந்து நடத்துநரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பேருந்து நடத்துநர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி, சம்பவத்தை கூறி குழந்தையை ஒப்படைத்துள்ளார்.

குழந்தையைப் பெற்றுக் கொண்ட போலீஸார், நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x