குழந்தை திருமணத்தால் மாணவி தற்கொலை முயற்சி

குழந்தை திருமணத்தால் மாணவி தற்கொலை முயற்சி
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் ஆண்டிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாருக்கும்(25). அதே மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் 2017-ல் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமண வாழ்க்கை பிடிக்காமல் சில நாட்களிலேயே அச்சிறுமி தந்தை வீட்டுக்கு திரும்பினார்.

அதன்பின், அந்தச் சிறுமியும், அவரது சித்தப்பா மகளும் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு குருகுல பள்ளியில் சேர்க்கப்பட்டு தற்போது, இருவரும் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்தப்பா வீட்டுக்கு வந்த அந்த மாணவி நேற்று முன்தினம் குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற் சித்துள்ளார்.

அதுதெரியாமல் மீதமிருந்த குளிர்பானத்தை அவரது சித்தப்பா மகளும் குடித்ததாகக் கூறப்படுகிறது. மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்த திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸார், சிவக்குமார் மற்றும் அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழும், சிவக்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in