Published : 25 Jan 2022 01:59 PM
Last Updated : 25 Jan 2022 01:59 PM

திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் புது காலனி தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷேக்தாவுது(எ) சேத்தப்பா(22). தனியார் கேட்டரிங் சர்வீஸில் வேலை செய்துவந்த இவர், நேற்று முன்தினம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில், முகமது ஷேக்தாவூது மதுபோதை யில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் நேற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முகமது ஷேக்தாவூதை கைது செய்தனர்.

இதற்கிடையே, அந்தச் சிறுமிக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x