Published : 25 Jan 2022 01:27 PM
Last Updated : 25 Jan 2022 01:27 PM

தூத்துக்குடி: மோட்டார் சைக்கிளை எரித்த 2 பேர் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் ரா.சரவணன் (44). இவர் தாளமுத்துநகரில் துக்க வீட்டுக்கு சென்றுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அ. மாரிமுத்து (32), ஜெ.தங்கராஜ் (29) ஆகியோர் குடிபோதையில், சரவணனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில்சரவணனின் ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. மாரிமுத்து, தங்கராஜ் ஆகிய இருவரையும், தாளமுத்துநகர் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x