Published : 24 Jan 2022 01:44 PM
Last Updated : 24 Jan 2022 01:44 PM

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண்ணைக் கொன்றதாக 2 பேர் கைது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம்(51). இவர், புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்து, அங்குள்ள மருத்துவத் துறையினரின் சிக்கன நாணய சங்க அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் நாகரத்தினம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நாகரத்தினத்தை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தைச் சேர்ந்த பெரமன் மகன் சிவா என்ற ஜீவானந்தம்(46) மற்றும் அவுச்சிகோன்பட்டியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் வீரராசு(37) ஆகிய 2 பேரை போலீஸார் நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x