Published : 20 Jan 2022 09:51 AM
Last Updated : 20 Jan 2022 09:51 AM

கோவை: சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் பெயின்டர் கைது

கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயின்டர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டியம்படாவைச் சேர்ந்தவர் சபரி(35). இவர், கோவை கோவில்மேடு திலகர் நகரில் தங்கியிருந்து பெயின்டர் வேலைக்கு சென்று வந்தார். இவர், கடந்த 9-ம் தேதி தனக்கு தெரிந்த நபரின் 4 வயது மகளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் அந்த சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது சிறுமி அவருடன் செல்ல மறுத்து, உறவினர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சபரியை சரமாரியாக தாக்கி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸில் நேற்று ஒப்படைத்தனர். போக்ஸோ பிரிவில் சபரி மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x