கொலையாளிகளை கைது செய்ய திருபுவனையில் மறியல்

கொலையாளிகளை கைது செய்ய திருபுவனையில் மறியல்
Updated on
1 min read

புதுச்சேரி திருபுவனை பெரியபேட் வி.டி.சி வீதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் ரவீந்தர் (37). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி (34)என்ற மனைவியும், 3 குழந்தைக ளும் உள்ளனர். கடந்த டிச.31-ம்தேதி இரவு மதுபோதையில் இருந்த ரவீந்தரின் மூத்த சகோதரர் மாணிக்கம் (49) என்பவரை அதே வீதியில் வசிக்கும் கவுரிசங்கர் (25), வினோத் (27),லோகேஸ்வரன் (25) ஆகியோர் தாக்கியுள் ளனர்.

இதை தட்டிக்கேட்ட ரவீந்தரையும் மூவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாய மடைந்தார். புதுச்சேரி அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ரவீந்தர் உயிரிழந்தார்.

இதையடுத்து கொலையாளி கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருபுவனை காவல் நிலை யத்தில் ரவீந்தரின் உறவினர்கள் புகார் அளித்தனர். மேலும் கொலை யாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கவுரிசங்கர், வினோத், யோகேஸ்வரன் ஆகி யோரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை யாளிகளை கைது செய்யக்கோரி ரவீந்தரின் உறவினர்கள் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த புதுச்சேரி வடக்கு பகுதி எஸ்பி ரங்கநாதன், திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தினர் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in